Saturday, October 3, 2015

மணமக்களுக்கான பிரார்த்தனை



மணமக்களுக்கான பிரார்த்தனை

Post image for மணமக்களுக்கான பிரார்த்தனை
இஸ்லாமியத் திருமணம் தொடர்…
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ):-
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
… பாரகல்லாஹ_லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்…
பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக! என்று கூறுவார்களென அபூஹ_ரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
முஹம்மது நபி (ஸல்) கூறியுள்ளார்கள்: வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தை (குர்ஆன்) நடைமுறையில் சிறந்தது என்னுடைய நடைமுறை (சுன்னத்) காரியங்களில் கெட்டது பித்அத்துக்கள் (இஸ்லாம் மார்கத்தில் நபிவழிக்கு மாற்றமாக சேர்க்கப்பட்ட அதிகமாக்கப்பட்ட புதுமையானவைகள்) பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளே, வழிகேடுகள் நரகத்தில் (கொண்டு) சேர்க்கும். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி), ஆதாரம்: புகாரி.
நடைமுறையில் உள்ள ஸஅல்லிஃப் பைனஹ_மா போன்ற துவாவை ஒதுவது அதற்கு நபி (ஸல்) கூறாத விதத்தில் ஆமீன், ஆமீன் என்று முழுங்குவதைனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த துவா ஒதும் போது அலி, ஃபாத்திமா என்ற பெயர், வரும்போது பெண்ணுக்கு பெண்ணுடைய உறவினர் (தாலி)கருகமணி கட்டுவது போன்றவை ஆதாரமற்ற மூட நம்பிக்கையாகும். அதை நாம் அவசியம் தவிர்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது நபித்துவத்தில் நிக்காஹ்விலோ, நிக்காஹாவிற்கு பிறகோ தன் மனைவிகளுக்கோ அல்லது தன் மகள் ஃபாத்திமாவுக்கோ (தாலி) கருகமணி கட்டவே இல்லை என்பதும், (தாலி) கருகமணி கட்டுவது அதை கணவன் இறந்த பின் அறுப்பது பின் அந்த பெண்ணை விதவை கோலத்தில் வைத்து அபசகுணமாக கருதி ஒதுக்கி வைப்பது இவையாவும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாதவை. இவை பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையாகும்.
சீறா புராணத்தை இயற்றிய உமர் புலவர் நபி (ஸல்) அவர்களுக்கும் சுமார் ஆயிரம் வருடத்திற்குப் பின்னர் பிறந்துள்ளவர். தனது கற்பனையினால் சில கவிதைகளை இயற்றி அதில் இப்படி அலி (ரலி), ஃபாத்திமா (ரலி) திருமணத்தைக் கற்பனையாகப் பாடியுள்ளார். இதை செயல்படுத்தும் நமது தமிழ் உறுது முஸ்லிம் மக்கள் நபிவழியை சுன்னத்தை செயல்படுத்தவில்லை என்பதை அறியலாம். ஆகையால் நாம் நபி வழியை கடைபிடித்தால் இம்மையில், மறுமையில் வெற்றி பெறுவோம்.
மணமக்களின் பிரார்த்தனை (துஆ):-
லயின் அதய்தனா ஸாலிஹன் லநகூனன்ன மினஷ் ஷாகிரீன்” (7:189)
எங்களிறைவா! எங்களிருவருக்கும் நீ நல்லதை (சந்ததியை) கொடுத்தால் நிச்சயமாக நாங்களிருவரும் நன்றியுடையவர்களாக இருப்போம். (அல்குர்ஆன் 7:189)
(ஆதிமனிதர் ஆதம் (அலை) அவரது துணைவியார் ஹவ்வா (அலை) அவர்களுடன் கேட்ட பிரார்த்தனை)
“ரப்பீஹப்லி மின்லதுன்க துர்ரியய்யதன் தைய்யிபதன் இன்னக்க சமிஉத்துஆ”
இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளைச் செவிமடுப்பவன். (அல்குர்ஆன் 3:38)
(ஜக்கரிய்யா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)
மணமகனின் பிரார்த்தனை (துஆ):-
ரப்பனா ஹப்லலனா மின் அஜ்வாஜினா வ துர்ரிய்யாதினா குர்ரத்த அயுனின் வ ஜஅல்னா லில் முத்தகீன இமாமா”
எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்கு கண்களின் குளிர்ச்சியைத் தருவாயாக! இன்னும் இறையுணர்வுடையோர்க்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கி அருள்வாயாக.(அல்குர்ஆன் 25:74)
(ரஹ்மானின் நல்லடியார்கள் கேட்கும் பிரார்த்தனைகளில் ஒன்று பார்க்க 25:67 முதல் 75 வசனங்கள்)
ஒரு பெண்ணை மணமுடித்ததும் அவளது முன்னெற்றி ரோமத்தை பிடித்திக் கொண்டு மணமகன்:
அல்லாஹ_ம்ம இன்னீ அஸ்அலுக ஹைரஹா வஹைர மா ஜபல்த்த அலைஹி வ அவூது பிக மின் ஷர்ரிஹா வஷர்ரி மாஜபல்த்த அலைஹி”
என்று பரகத்துக்காக துஆ செய்ய வேண்டும்.
பொருள்: இறைவா! இப்பெண்ணிடமிருந்து (எனக்கு) நன்மையானவை கிடைக்க வேண்டுமென்றும், இப்பெண்ணின் இயல்புகளிலிருந்து எனக்கு நன்மையானவை கிடைக்க வேண்டுமென்றும், உன்னிடம் வேண்டுகிறேன். மேலும் இப்பெண்ணிடமிருந்து தீங்குகள் ஏற்படாமலிருக்கவும் உன்னிடம் வேண்டுகிறேன். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமர்பின் ஆஸ் (ரலி) ஆதாரம்: ஹாகிம்

முன்மாதிரி முஸ்லிம்



              அங்கீகரிப்பட்ட ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு தனது ஊர் மற்றும் குடும்பத்தினரிடம் திரும்புகிறவர் அவரின் தாய் அவரை பெற்றெடுத்த தினத்தில் இருந்ததுபோல் பாவங்கள் நீங்கியவராக திரும்புகிறார். பைத்துல்லாஹ்வை மையமாகக்கொண்டு உலகின் அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைத்த மகத்தான மார்க்கத்தின் மாண்புகளைப் புரிந்து, தனது இதயத்தை ஈமானால் நிரப்புகிறார்.
    எனெனில், ஹஜ் என்பது முஸ்லிம்களின் உலகளாவிய மாநாடாகும். ஹஜ்ஜைத் தவிர வேறு எங்கும் இம்மாதிரியான மாநாட்டை உலகம் கண்டிராது. ஹாஜிகள் பல்வேறு இனம், நிறம், மொழியுடையவர்களாக இருந்தும் எவ்வித ஏற்றத் தாழ்வுமின்றி மிகப் பெரியவனான ஏக இறைவனாம் அல்லாஹ்வைப் புகழ்ந்து தஸ்பீஹ், தக்பீர், தஹ்லீல் மற்றும் தல்பியாவை முழங்குகிறார்கள்.
    அல்லாஹ்விடம் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவார்
    இவ்வுலகில் தனக்கு அருளப்பட்ட அனைத்தும் தனது இரட்சகனை வணங்குவதற்காகத்தான் என்பதில் முஸ்லிம் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பார்.
    (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி ஜின்களையும், மனிதர்களையும் நான் படைக்கவில்லை. (அல்குர்அன் 52:56)
    இப்பிரபஞ்சத்தைச் செழிப்பாக்குவதிலும், புவியில் அல்லாஹ்வின் எகத்துவ கலிமாவை உறுதிப்படுத்துவதிலும், வாழ்வில் இஸ்லாமிய நெறிமுறையைக் கொண்டுவருவதிலும் அவன் எடுக்கக்கூடிய எவ்வொரு ஆக்கப்பூர்வமான முயற்சியிலும் அல்லாஹ்வை வணங்குவதே அவனது நோக்கமாக இருக்க வேண்டும். நாம் அல்லாஹ்வை வணங்குகிறோம் என்ற உணர்வோடு வணங்க வேண்டும். அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்விடம் மனிதன் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தி தனது அனைத்து செயலிலும் அவனது திருப்தியையே நோக்கமாகக் கொள்ள வேண்டும். இறைவழியிலேயே தனது செயல்கள் அனைத்தும் அமைந்துள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
    முஸ்லிம் செய்யும் இறைவணக்கங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது இப்புவியில் அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டுவதும் அவனது வழிமுறையை வாழ்வில் பின்பற்றுவதும்தான். இவ்வாறு, தனிமனிதரின் குடும்பம், சமூகம், நாடு என வாழ்க்கையின் அனைத்திலும் அல்லாஹ்வின் மார்க்கமே ஆட்சி செய்யவேண்டும்.
    மனித இனம் மற்றும் ஜின் வர்க்கத்தை எந்த இலட்சியத்துக்காக அல்லாஹ் படைத்தானோ, அந்த மகத்தான இலட்சியத்தை உறுதிப் படுத்துவதில் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் தனது இறைவணக்கங்கள் குறையற்றதாக அமையும் என்பதை முஸ்லிம் உணர்ந்துகொள்ள வேண்டும். மனித, ஜின் வர்க்கத்தை அல்லாஹ் படைத்தது (இஃலாவு கலிமதில்லாஹ்’) புவியில் அல்லாஹ்வின் கலிமாவை உயர்ந்தோங்கச் செய்வதற்காகத்தான். எனெனில் அதன்மூலமே மனிதகுலம் அல்லாஹ்வை வணங்குகிறது என்பதை உறுதிப்படுத்த முடியும்.
    (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி ஜின்களையும் மனிதர்களையும் நான் படைக்கவில்லை. (அல்குர்அன் 52:56)
    இதுதான் இஸ்லாமிய வணக்க வழிபாடுகளைப் பற்றிய நேரான பார்வையாகும். இக்கண்ணோட்டத்தில் நாம் பார்க்கும்போது முஸ்லிம் இறைத்தூதைச் சுமந்தவன் என்று விளங்கிக் கொள்ளலாம். மேலும் முஸ்லிம், வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து நடக்க வேண்டும். அந்தத் தூதுத்துவத்தையும், அவனது கட்டளைகளையும் ஏற்காதவரை அவனுடைய இஸ்லாம் பூரணத்துவம் பெறாது. தனது நடைமுறை வாழ்வில் அதை உறுதிப்படுத்தி மனத்தூய்மையுடன் செயல்படுத்தாத வரை அவனது வணக்கங்கள் அல்லாஹ்வின் திருப்திக்காக செய்யப்பட்டதல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
    இந்தத் தூதுத்துவம்தான் முஸ்லிம் தன்னை இஸ்லாமைச் சேர்ந்தவன் என்று சொல்வதற்குரிய சரியான அடையாளமாகும். அதுமட்டுமே அல்லாஹ்வின் பாதையில் போராடும் வாய்மைமிக்க முஸ்லிம்களின் அந்தஸ்தில் அவரை சேர்ப்பிக்கிறது. அதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு வழிகோலுகிறது. மேலும் மனிதன் இப்புவியில் படைக்கப்பட்டதற்கான, ஏனைய படைப்பினங்களைவிட மேன்மை பெற்றதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்துகிறது.
    அதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்) கடலில் (கப்பல்கள் மீதும்) நாம்தாம் அவர்களைச் சுமந்து செல்லும்படி செய்கிறோம். நல்ல அகாரங்களையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் படைத்த (மற்ற ஜீவராசிகளில்) அநேகவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கிறோம். (அல்குர்அன் 17:70)
    வசந்தகால தென்றலை எதிர்கொள்வது போல் உண்மை முஸ்லிம் இந்தத் தூதுத்துவத்தை மனமகிழ்வோடு ஏற்றுக் கொள்வதில் எவ்வித புதுமையும் இல்லை. அதன் உயர்வுக்காக தனது அனைத்து முயற்சிகளையும் செல்வங்களையும் நேரத்தையும் அர்ப்பணிப்பார். அதுதான் அவரது தனித்தன்மையான வாழ்வுக்கும் அல்லாஹ்வை நெருங்கி இருப்பதற்கும் அடையாளமாகும். அதைத்தவிர வாழ்வில் எந்த சுவையும் கிடையாது. அதுவன்றி வாழ்வதில் அர்த்தமேயில்லை. அதை உறுதிப்படுத்துவதற்காக தொடர்ந்து முன்னேறிச் செல்வதைத் தவிர அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்கான வழி எதுமில்லை.
    மார்க்க அழைப்புப் பணியே உண்மை முஸ்லிம் நிலைநாட்ட வேண்டிய அமல்களில் மகத்தானதாகும். அல்லாஹ்வின்பால் நெருக்கி வைக்கும், அவனது திருப்பொருத்தத்தைப் பெற்றுத்தரும் உன்னதமான நற்செயலாகும். எனவே உண்மை முஸ்லிம் இந்த அழைப்புப் பணிக்கு உதவுவதிலும் இதன் மகத்தான இலட்சியங்களை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதிலும் தொடர்ந்து முயலவேண்டும். அதைத் தவிர வேறெந்த இலட்சியத்தையும் நோக்கமாக கொள்ளக்கூடாது.
    அதிகமாக குர்அன் ஒதுவார் 
    ஈமான் என்ற இந்த உயரிய அந்தஸ்தை அடைவதற்காக முஸ்லிம் பரிசுத்த திருக்குர்அனின் நிழலில் இளைப்பாறுவதை வழமையாக்கி நேர்வழியின் தென்றலை சுவாசித்து நன்மையின் உச்சத்தை அடைவார். அதன் வசனங்களை இறையச்சத்துடன் இரவு பகலில் அதிகமதிகம் ஒதி அவைகளை ஆழ்ந்து சிந்திப்பார். அதற்காக குறிப்பிட்ட நேரங்களை ஒதுக்குவார். தனது இரட்சகனுடன் உரையாடி, அவனின் வேத கருத்துக்களை ஏற்று, இதயத்தைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டு தனது ஈமானையும் மன நிம்மதியையும் அறிவாற்றலையும் அதிகரித்துக் கொள்வார்.
    அல்லாஹ்வின் திருநாமத்தை நினைவு கூர்வதால் (உண்மை விசுவாசிகளின்) இதயங்கள் நிச்சயமாக நிம்மதியடையும் என்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்ளும். (அல்குர்அன் 13:28)
இறையச்சமுள்ள முஸ்லிம், நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த அழகிய முறையில் குர்அனை அணுக வேண்டும்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “”திருக்குர்அனை ஒதுகின்ற மூமினின் நிலை ஆரஞ்சுப் பழத்தைப் போன்றதாகும். அதன் சுவையும் நன்று. வாசனையும் நன்று. (மற்ற நற்செயல்கள் புரிந்துகொண்டு) குர்அன் ஒதாத மூமின் பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று. (அனால்) அதற்கு வாசனை கிடையாது. நயவஞ்சகனாக இருந்து கொண்டு, குர்அனையும் ஒதி வருகிறவனின் நிலையானது துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று, சுவையோ கசப்பு. நயவஞ்சகனாக இருந்து கொண்டு குர்அனை ஒதாமலிருப்பவனின் நிலையானது குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும் கிடையாது.” (ஸஹீஹுல் புகாரி)
    நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: “”நீங்கள் குர்அனை (அதிகமதிகம்) ஒதுங்கள். அது அதை ஒதியோருக்கு மறுமை நாளில் சிபாரிசு செய்யும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
     மேலும் கூறினார்கள்: “”குர்அனை நன்கறிந்து ஒதுபவர் மறுமை நாளில் மிக கண்ணியமான நல்லோர்களுடன் இருப்பார். குர்அனை ஒதும்போது சிரமத்துடன் திக்கித் திக்கி ஒதுபவருக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    இதற்குப் பிறகும் ஒர் உண்மையான முஸ்லிம் திருக்குர்அனை ஒதி அதன் கருத்துகளைச் சிந்திப்பதிலிருந்து அலட்சியமாக இருந்துவிட முடியுமா என்ன? ஆழ்ந்த இறைநம்பிக்கை, நிரந்தரமான நற்செயல்கள், எப்போதும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை எதிர்நோக்கல், அல்லாஹ்விடம் தனது அடிமைத்தனத்தையும் உறுதிப்படுத்துதல் ஆகியவையே ஒரு முஸ்லிம் தனது இரட்சகனுடன் கொள்ளவேண்டிய தொடர்பாகும்.
     (எனக்கு வழிப்பட்டு என்னை) வணங்குவதற்கன்றி ஜின்களையும் மனிதர்களையும் நான் படைக்கவில்லை. (அல்குர்அன் 52:56)
 
 
 

இந்த அங்கீகரிப்பட்ட ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு தனது ஊர் மற்றும் குடும்பத்தினரிடம் திரும்புகிறவர் அவரின் தாய் அவரை பெற்றெடுத்த தினத்தில் இருந்ததுபோல் பாவங்கள் நீங்கியவராக திரும்புகிறார். பைத்துல்லாஹ்வை மையமாகக்கொண்டு உலகின் அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைத்த மகத்தான மார்க்கத்தின் மாண்புகளைப் புரிந்து, தனது இதயத்தை ஈமானால் நிரப்புகிறார்.
    எனெனில், ஹஜ் என்பது முஸ்லிம்களின் உலகளாவிய மாநாடாகும். ஹஜ்ஜைத் தவிர வேறு எங்கும் இம்மாதிரியான மாநாட்டை உலகம் கண்டிராது. ஹாஜிகள் பல்வேறு இனம், நிறம், மொழியுடையவர்களாக இருந்தும் எவ்வித ஏற்றத் தாழ்வுமின்றி மிகப் பெரியவனான ஏக இறைவனாம் அல்லாஹ்வைப் புகழ்ந்து தஸ்பீஹ், தக்பீர், தஹ்லீல் மற்றும் தல்பியாவை முழங்குகிறார்கள்.
    அல்லாஹ்விடம் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவார்
    இவ்வுலகில் தனக்கு அருளப்பட்ட அனைத்தும் தனது இரட்சகனை வணங்குவதற்காகத்தான் என்பதில் முஸ்லிம் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பார்.
    (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி ஜின்களையும், மனிதர்களையும் நான் படைக்கவில்லை. (அல்குர்அன் 52:56)
    இப்பிரபஞ்சத்தைச் செழிப்பாக்குவதிலும், புவியில் அல்லாஹ்வின் எகத்துவ கலிமாவை உறுதிப்படுத்துவதிலும், வாழ்வில் இஸ்லாமிய நெறிமுறையைக் கொண்டுவருவதிலும் அவன் எடுக்கக்கூடிய எவ்வொரு ஆக்கப்பூர்வமான முயற்சியிலும் அல்லாஹ்வை வணங்குவதே அவனது நோக்கமாக இருக்க வேண்டும். நாம் அல்லாஹ்வை வணங்குகிறோம் என்ற உணர்வோடு வணங்க வேண்டும். அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்விடம் மனிதன் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தி தனது அனைத்து செயலிலும் அவனது திருப்தியையே நோக்கமாகக் கொள்ள வேண்டும். இறைவழியிலேயே தனது செயல்கள் அனைத்தும் அமைந்துள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
    முஸ்லிம் செய்யும் இறைவணக்கங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது இப்புவியில் அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டுவதும் அவனது வழிமுறையை வாழ்வில் பின்பற்றுவதும்தான். இவ்வாறு, தனிமனிதரின் குடும்பம், சமூகம், நாடு என வாழ்க்கையின் அனைத்திலும் அல்லாஹ்வின் மார்க்கமே ஆட்சி செய்யவேண்டும்.
    மனித இனம் மற்றும் ஜின் வர்க்கத்தை எந்த இலட்சியத்துக்காக அல்லாஹ் படைத்தானோ, அந்த மகத்தான இலட்சியத்தை உறுதிப் படுத்துவதில் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் தனது இறைவணக்கங்கள் குறையற்றதாக அமையும் என்பதை முஸ்லிம் உணர்ந்துகொள்ள வேண்டும். மனித, ஜின் வர்க்கத்தை அல்லாஹ் படைத்தது (இஃலாவு கலிமதில்லாஹ்’) புவியில் அல்லாஹ்வின் கலிமாவை உயர்ந்தோங்கச் செய்வதற்காகத்தான். எனெனில் அதன்மூலமே மனிதகுலம் அல்லாஹ்வை வணங்குகிறது என்பதை உறுதிப்படுத்த முடியும்.
    (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி ஜின்களையும் மனிதர்களையும் நான் படைக்கவில்லை. (அல்குர்அன் 52:56)
    இதுதான் இஸ்லாமிய வணக்க வழிபாடுகளைப் பற்றிய நேரான பார்வையாகும். இக்கண்ணோட்டத்தில் நாம் பார்க்கும்போது முஸ்லிம் இறைத்தூதைச் சுமந்தவன் என்று விளங்கிக் கொள்ளலாம். மேலும் முஸ்லிம், வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து நடக்க வேண்டும். அந்தத் தூதுத்துவத்தையும், அவனது கட்டளைகளையும் ஏற்காதவரை அவனுடைய இஸ்லாம் பூரணத்துவம் பெறாது. தனது நடைமுறை வாழ்வில் அதை உறுதிப்படுத்தி மனத்தூய்மையுடன் செயல்படுத்தாத வரை அவனது வணக்கங்கள் அல்லாஹ்வின் திருப்திக்காக செய்யப்பட்டதல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
    இந்தத் தூதுத்துவம்தான் முஸ்லிம் தன்னை இஸ்லாமைச் சேர்ந்தவன் என்று சொல்வதற்குரிய சரியான அடையாளமாகும். அதுமட்டுமே அல்லாஹ்வின் பாதையில் போராடும் வாய்மைமிக்க முஸ்லிம்களின் அந்தஸ்தில் அவரை சேர்ப்பிக்கிறது. அதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு வழிகோலுகிறது. மேலும் மனிதன் இப்புவியில் படைக்கப்பட்டதற்கான, ஏனைய படைப்பினங்களைவிட மேன்மை பெற்றதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்துகிறது.
    அதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்) கடலில் (கப்பல்கள் மீதும்) நாம்தாம் அவர்களைச் சுமந்து செல்லும்படி செய்கிறோம். நல்ல அகாரங்களையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் படைத்த (மற்ற ஜீவராசிகளில்) அநேகவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கிறோம். (அல்குர்அன் 17:70)
    வசந்தகால தென்றலை எதிர்கொள்வது போல் உண்மை முஸ்லிம் இந்தத் தூதுத்துவத்தை மனமகிழ்வோடு ஏற்றுக் கொள்வதில் எவ்வித புதுமையும் இல்லை. அதன் உயர்வுக்காக தனது அனைத்து முயற்சிகளையும் செல்வங்களையும் நேரத்தையும் அர்ப்பணிப்பார். அதுதான் அவரது தனித்தன்மையான வாழ்வுக்கும் அல்லாஹ்வை நெருங்கி இருப்பதற்கும் அடையாளமாகும். அதைத்தவிர வாழ்வில் எந்த சுவையும் கிடையாது. அதுவன்றி வாழ்வதில் அர்த்தமேயில்லை. அதை உறுதிப்படுத்துவதற்காக தொடர்ந்து முன்னேறிச் செல்வதைத் தவிர அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்கான வழி எதுமில்லை.
    மார்க்க அழைப்புப் பணியே உண்மை முஸ்லிம் நிலைநாட்ட வேண்டிய அமல்களில் மகத்தானதாகும். அல்லாஹ்வின்பால் நெருக்கி வைக்கும், அவனது திருப்பொருத்தத்தைப் பெற்றுத்தரும் உன்னதமான நற்செயலாகும். எனவே உண்மை முஸ்லிம் இந்த அழைப்புப் பணிக்கு உதவுவதிலும் இதன் மகத்தான இலட்சியங்களை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதிலும் தொடர்ந்து முயலவேண்டும். அதைத் தவிர வேறெந்த இலட்சியத்தையும் நோக்கமாக கொள்ளக்கூடாது.
    அதிகமாக குர்அன் ஒதுவார் 
    ஈமான் என்ற இந்த உயரிய அந்தஸ்தை அடைவதற்காக முஸ்லிம் பரிசுத்த திருக்குர்அனின் நிழலில் இளைப்பாறுவதை வழமையாக்கி நேர்வழியின் தென்றலை சுவாசித்து நன்மையின் உச்சத்தை அடைவார். அதன் வசனங்களை இறையச்சத்துடன் இரவு பகலில் அதிகமதிகம் ஒதி அவைகளை ஆழ்ந்து சிந்திப்பார். அதற்காக குறிப்பிட்ட நேரங்களை ஒதுக்குவார். தனது இரட்சகனுடன் உரையாடி, அவனின் வேத கருத்துக்களை ஏற்று, இதயத்தைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டு தனது ஈமானையும் மன நிம்மதியையும் அறிவாற்றலையும் அதிகரித்துக் கொள்வார்.
    அல்லாஹ்வின் திருநாமத்தை நினைவு கூர்வதால் (உண்மை விசுவாசிகளின்) இதயங்கள் நிச்சயமாக நிம்மதியடையும் என்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்ளும். (அல்குர்அன் 13:28)
இறையச்சமுள்ள முஸ்லிம், நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த அழகிய முறையில் குர்அனை அணுக வேண்டும்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “”திருக்குர்அனை ஒதுகின்ற மூமினின் நிலை ஆரஞ்சுப் பழத்தைப் போன்றதாகும். அதன் சுவையும் நன்று. வாசனையும் நன்று. (மற்ற நற்செயல்கள் புரிந்துகொண்டு) குர்அன் ஒதாத மூமின் பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று. (அனால்) அதற்கு வாசனை கிடையாது. நயவஞ்சகனாக இருந்து கொண்டு, குர்அனையும் ஒதி வருகிறவனின் நிலையானது துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று, சுவையோ கசப்பு. நயவஞ்சகனாக இருந்து கொண்டு குர்அனை ஒதாமலிருப்பவனின் நிலையானது குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும் கிடையாது.” (ஸஹீஹுல் புகாரி)
    நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: “”நீங்கள் குர்அனை (அதிகமதிகம்) ஒதுங்கள். அது அதை ஒதியோருக்கு மறுமை நாளில் சிபாரிசு செய்யும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
     மேலும் கூறினார்கள்: “”குர்அனை நன்கறிந்து ஒதுபவர் மறுமை நாளில் மிக கண்ணியமான நல்லோர்களுடன் இருப்பார். குர்அனை ஒதும்போது சிரமத்துடன் திக்கித் திக்கி ஒதுபவருக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    இதற்குப் பிறகும் ஒர் உண்மையான முஸ்லிம் திருக்குர்அனை ஒதி அதன் கருத்துகளைச் சிந்திப்பதிலிருந்து அலட்சியமாக இருந்துவிட முடியுமா என்ன? ஆழ்ந்த இறைநம்பிக்கை, நிரந்தரமான நற்செயல்கள், எப்போதும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை எதிர்நோக்கல், அல்லாஹ்விடம் தனது அடிமைத்தனத்தையும் உறுதிப்படுத்துதல் ஆகியவையே ஒரு முஸ்லிம் தனது இரட்சகனுடன் கொள்ளவேண்டிய தொடர்பாகும்.
     (எனக்கு வழிப்பட்டு என்னை) வணங்குவதற்கன்றி ஜின்களையும் மனிதர்களையும் நான் படைக்கவில்லை. (அல்குர்அன் 52:56)